கௌதம புத்தர் என்பவர் கி.மு 563க்கும், கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். இவரை அடிப்படையாகக் கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. இவரது இயற்பெயர் “சித்தார்த்த கௌதமர்” என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் அழைக்கப்பட்டார். புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய வாழ்க்கையையும் வழி காட்டல்களையும் துறவிமட விதிகளையுமே பௌத்த பிக்குகள் மனனம் செய்துவந்தார்கள். அவற்றுள் மிக முக்கியமானதாக தம்மபதம் விளங்குகிறது. பிற மத நூல்களைப் போன்று அல்லாமல் இந்நூல் மக்களின் அன்றாடப் பேச்சு வழக்கில் உருவாக்கப்பட்டது. மேலும் எளிய நடை இதன் சிறப்பம்சம் ஆகும். குரு - சீட பரம்பரையூடாக வாய்மொழி மூலம் கடத்தப்பட்டு வந்த இத்தகவல்கள், நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் திரிபிடகம் என்கிற நூலாக எழுத்துவடிவம் பெற்றது. மேலும்...
சவூதி அரேபியா மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது மத்திய கிழக்கின் நடுவில் அமைந்துள்ளது. அரபுத் தீபகற்பத்தின் பெரும்பாலான பகுதிகளை இது ஆக்கிரமித்துள்ளது. சுமார் 21.50 இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்நாடு, உலகின் பன்னிரெண்டாவது மிகப் பெரிய நாடு ஆகும். இந்நாட்டின் நிலப்பரப்பில் பெரும்பாலான பகுதி வறண்ட பாலைவனம், தாழ்நிலப் பகுதி, புல்வெளி மற்றும் மலைகளைக் கொண்டுள்ளது. செங்கடல் மற்றும் பாரசீக வளைகுடா ஆகிய இரு கடல்களின் கடற்கரையையும் கொண்ட ஒரே நாடு சவூதி அரேபியா தான். இந்நாட்டின் தலைநகரம் மற்றும் மிகப் பெரிய நகரம் ரியாத் ஆகும். ஜித்தா, மக்கா, மதீனா முதலியன பிற முக்கியமான நகரங்கள் ஆகும். இந்நாட்டின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 3.22 கோடி. அரபுலகில் சவூதி அரேபியா நான்காவது மிக அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. மேலும்...
துட்டு என்பது தற்போது வழக்கில் இல்லாத குறைந்த மதிப்பு கொண்ட பழைய டச்சு செப்பு நாணயம் ஆகும். இது தமிழில் குறைந்த மதிப்புள்ள பணத்தைக் குறிக்கும் ஒரு பேச்சு வழக்காக உள்ளது.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,74,360 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.